கன்னாபின்னாச் செய்திகள் 5
Posted ஜனவரி 12, 2009
on:- In: நையாண்டி
- 24 Comments
ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் …
ஏன் இவ்ளோ கஷ்ட படறீங்க, அரசை கேட்டா உங்களுக்காகவே தனி ரயில், பஸ் விடுவாங்களே!
தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் இந்தியாவின் நட்பு நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது சிதம்பரம்
பாகிஸ்தான்: இன்னுமா நம்பளை நம்பிக்கிட்டு இருக்காங்க?
ஐடி துறையில் முதலீடு செய்வது வீண் .. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி
அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.
நமது அண்டை நாடுகளில் இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலும் நிலையான ஜனநாயகம் இல்லை ப.சிதம்பரம்
அப்படியா!
தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்; அதற்கு அடுத்த வழியும் தெரியும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
எது புற வழியா?
யோகா தொடர்பாக அடிக்கடி சென்னைக்கு வருவேன். எனக்குப் பிடித்த ஊர்களில் மெட்ராஸும் ஒன்று. சில்பா ஷெட்டி
நம்பிடாதீங்க, இதையே ஹைதராபாத்லையும் சொல்லுவாங்க.
நான் கொடுத்தது லஞ்சம் அல்ல – ஸ்டாலின். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது புதிதாக பிறந்த ஒரு குழந்தைக்கு வாழ்த்து கேட்டபோது, தான் பிறந்த நாள் பரிசு கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
ஒன்னும் சொல்லறதுக்கில்லை
சத்யம் நிறுவனத்தில் நடந்த கோல்மால்களை வைத்து ராம் கோபால் வர்மா ஒரு படம் எடுப்பதற்காக சத்யம் நிறுவன நிதி ஆவணங்களை ஆராய்ந்துள்ளார் என்று நம்ப முடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி திமுக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி
திமுகவின் வெற்றி ஓர் மாயை: விஜயகாந்த்
பணம் பலம் வென்று விட்டது: ஜெயலலிதா
இதுவே அதிமுக ஜெயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்
அதிமுகவின் வெற்றி ஓர் மாயை: கருணாநிதி
பண பலத்தையும் மீறி மக்கள் எங்களுக்கு ஒட்டு போட்டதற்கு அதிமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைதான் காரணம் – ஜெயலலிதா
இந்த வண்ணத்தில் இருப்பவை நிஜச் செய்திகள். இவ்வண்ணத்தில் இருப்பவை கன்னாபின்னாச் செய்திகள்.
24 பதில்கள் to "கன்னாபின்னாச் செய்திகள் 5"
//ஐடி துறையில் முதலீடு செய்வது வீண் .. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி
அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.
இது டாப்.
வழக்கம் போல் எல்லா செய்தியையும் ரசித்து சிரித்தேன்.
ஆமா இதென்ன ரெண்டு பிள்ளைங்க இங்க ஒடி பிடிச்சு விளையாடிட்டு இருக்காங்க வீட்டுல தேட மாட்டாங்களா? ம்….ம்… எல்லாரும் ஓடுங்க.
//தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்; அதற்கு அடுத்த வழியும் தெரியும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
எது புற வழியா?
//
ஐயோ……….. ஐயோ….. முடில பாஸ்
1 | அது சரி
ஜனவரி 13, 2009 இல் 3:37 முப
//
ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் …
ஏன் இவ்ளோ கஷ்ட படறீங்க, அரசை கேட்டா உங்களுக்காகவே தனி ரயில், பஸ் விடுவாங்களே!
//
அப்படி அவங்களுக்கு பஸ்ல, ட்ரெய்ன்ல போறது கஷ்டமா இருந்தா கொஞ்சம் அழுத்திக் கேட்டா தனி ஃபிளைட்டே அரேஞ்ச் பண்ணுவாங்க…
உங்க கமெண்ட்டெல்லாம் நல்லா இருக்கு மோகன் :0))
மோகன்
ஜனவரி 14, 2009 இல் 1:29 பிப
// அப்படி அவங்களுக்கு பஸ்ல, ட்ரெய்ன்ல போறது கஷ்டமா இருந்தா கொஞ்சம் அழுத்திக் கேட்டா தனி ஃபிளைட்டே அரேஞ்ச் பண்ணுவாங்க… //
அது சரி, சரியா சொன்னீங்க, சார்டர்ட் பிளைட் ரெடி பண்ணித் தருவாங்க.
//உங்க கமெண்ட்டெல்லாம் நல்லா இருக்கு மோகன் :0))//
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.