Posted by: மோகன் on: ஜனவரி 12, 2009
ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் …
ஏன் இவ்ளோ கஷ்ட படறீங்க, அரசை கேட்டா உங்களுக்காகவே தனி ரயில், பஸ் விடுவாங்களே!
தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் இந்தியாவின் நட்பு நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது சிதம்பரம்
பாகிஸ்தான்: இன்னுமா நம்பளை நம்பிக்கிட்டு இருக்காங்க?
ஐடி துறையில் முதலீடு செய்வது வீண் .. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி
அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.
நமது அண்டை நாடுகளில் இலங்கையை தவிர வேறு எந்த [...]
Posted by: மோகன் on: நவம்பர் 1, 2008
நவம்பர் 1 (இன்று தான்) சேலம் தினமாக கொண்டாடப்படுகிறது.
சேலம் நகராட்சி 1866ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அதை குறிக்கும் விதமாக இனி வரும் ஒவ்வொரு நவம்பர் 1ம் தேதி சேலம் தினமாக கொண்டாடப்படவுள்ளது.
அப்போதைய சேலம் நகராட்சி அவைத்தலைவராக(chairman) இருந்தவர் அர்புத்னாட் (Arbuthnott), 1917 ல் ராஜாஜி அவைத்தலைவராக இருந்தார். சேலம் ஜூன் 1 1994 ல் மாநகராட்சியாக ஆனது. டாக்டர் சூடாமணி அப்போதைய மேயராக இருந்தார். இப்போது ரேகா பிரியதர்ஷிணி மேயராக [...]
Posted by: மோகன் on: ஜூன் 26, 2008
சுத்த சைவ உணவகங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் சுத்த அசைவ உணவகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சென்ற வாரம் சேலம் சென்றிருந்தப்போது வீட்டுப்பக்கமுள்ள ஒரு மெஸ்ஸுக்கு போயிருந்தேன். அங்கு பார்த்த அறிவிப்பு பலகை தான் இது
என்ன அக்கறைப் பாருங்கள், சாப்பிடும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க சொல்கிறார்கள்.
Posted by: மோகன் on: மே 19, 2008
பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை மதராசி என்று குறிப்பிடுவது/கூப்பிடுவது வழக்கம். இது பொதுவாக தமிழகத்தை சாராதவர்களுக்கு பிடிக்காது என்று மட்டுமே அவர்கள் (தமிழகத்தை சாராதவர்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னை பொருத்த வரை தமிழகத்தை சார்ந்தவர்களுக்கும் கூட மதராசி என்று விளிப்பது பிடிக்காது. நம்மை பொருத்த வரையில் மதராசி என்பது நக்கலாக சொல்வதற்கும் கேலி செய்வதற்கும் வடக்கத்தியர்கள் உருவாக்கிய வார்த்தை. ஆனால் இப்பொழுது எனக்கு தெரிந்து பொதுவாக யாரும் “மதராசி” என்று உபயோகிப்பதில்லை.
அது போலவே சில ஊடகங்களில் தென்னிந்தியா [...]
Posted by: மோகன் on: மே 7, 2008
KS தியேட்டரை அறியாத சேலத்துக்காரர்கள் இருக்க முடியாது (10 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இப்பொழுதும் அப்படி என்றுதான் நினைக்கிறேன்). இப்பொழுதும் அந்த தியேட்டர் இருக்கிறது. ஆனால் அதில் படங்கள் இப்பொழுது திரையிடுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.
KS தியேட்டர், “KS தியேட்டர்” ஆக மாறுவதற்கு முன்பு “VPS தியேட்டர்” என்று இருந்தது. அதில் எப்பொழுதும் பழைய படங்களையே திரையிடுவார்கள். சிறு வயதில் நாங்கள் குடும்பத்தோடு “சங்கர் குரு” என்ற படத்தை VPS தியேட்டரில் [...]
அண்மைய மறுமொழிகள்