Posted by: மோகன் on: டிசம்பர் 31, 2008
என் கல்லூரிப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறேன். மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டா என்று நினைவு இல்லை. அச்சமயத்தில் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துக் கொண்டிருந்தன. அதில் பளுத் தூக்கும் போட்டியும் நடக்க இருந்தது. அதில் என் நண்பன் ஒருவன் பங்கேற்க பெயர் கொடுத்திருந்தான் (அவன் ஜிம் வழக்கமாக சென்று உடம்பை நன்றாக வைத்திருப்பான்).
நான் அச்சமயம் எடை மிகவும் குறைவு. ஆகையால் என் எடை பிரிவில் போட்டியிட யாரும் இருக்க மாட்டார்கள் எனவே நான் எவ்வளவு [...]
Posted by: மோகன் on: டிசம்பர் 18, 2008
செய்தி:
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக, சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.
இது போன்று இன்னும் என்ன என்ன நாட்களுக்கு என்ன இலவசமாகத் தரலாம் என்று ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்ததில் தேறியவை:
புது ஆண்டிற்கு(2009) மற்றும் கிரிஸ்த்மஸிற்கு கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
குடும்பத்தில் உள்ளவர்கள் பிறந்த நாளன்று பாயசம் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
காதலர் தினமன்று காதலர்களுக்கு வாழ்த்து அட்டைகள் இவற்றை இலவசமாகத் தரலாம்.
தீபாவளி பண்டிகைக்கு [...]
Posted by: மோகன் on: டிசம்பர் 15, 2008
பெரம்பூர் ரயில் நிலையம். சேலம் போவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார் ஆனந்த். அவசரமாக அலுவல் வேலையாய் செல்ல வேண்டி இருந்ததால் முன்பதிவு செய்யவில்லை. அப்போது சேலம் செல்லும் ஒரு ரயில் மிகுந்தக் கூட்டத்துடன் வந்தது. முன்பதிவு செய்யப்படாத ஒருப்பெட்டியில் முண்டியடித்து ஏறி உட்கார இடம் தேடினார். எங்கேயும் உட்கார இடம் இல்லை.
மெல்ல நகர்ந்து நான்கு பேர் உட்கார்ந்து இருந்த இருக்கை அருகேச் சென்றார். அங்கு உட்கார்ந்து இருந்த வாலிபனிடம் “கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்” என்றார். அதற்கு அவன் [...]
Posted by: மோகன் on: டிசம்பர் 12, 2008
இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்(தத்)திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
எல்லோரும் இதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருப்பார்கள். இருந்தாலும் நான் ரஜினி ரசிகன் என்பதால் இப்பதிவு.
வலையில் கிடைத்த சில சுவையான சம்பவங்களை அப்படியே பகிர்ந்துக் கொள்கிறேன்:
சினிமா எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் இருந்து எடுக்கப்பட்ட சுவையான சம்பவம். நன்றி சினிமா எக்ஸ்ப்ரஸ்.
பெங்களுருவில் உள்ள சாம்ராஜ்பேட்டை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட்… இந்தப் பகுதிகள் சென்னையிலுள்ள தி.நகர் ரங்கநாதன் தெரு போல் எந்த நேரமும் பரபரப்பாக [...]
Posted by: மோகன் on: டிசம்பர் 10, 2008
எங்க கன்னாபின்னாச் செய்திகள் அடுத்த பாகம் என்று விடாமல் மடல் மேல் மடல் போட்டு விசாரித்த அன்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இதோ கன்னாபின்னாச் செய்திகள் பாகம் 4.
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. காரணம் ஒகேனக்கல் விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை கர்நாடகா கிளப்பிக் கொண்டிருப்பதுதான். சில நாட்களுக்கு முன்பு கூட கர்நாடகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் ஒகேனக்கல் பகுதியில் ஆர்பாட்டம் [...]
Posted by: மோகன் on: டிசம்பர் 4, 2008
மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் போராடி தமது இன்னுயிரை நீத்த நமது பாதுகாப்பு படையினருக்கும் காவலர்களுக்கும் வீர வணக்கங்கள்.
தீவிரவாதிகளின் தாக்குதலால் அரசியல்வாதிகள் சண்டை போடுகிறார்களோ இல்லையோ ஆனால் தாங்கள் ஆதரிக்கும் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று பேச ஆரம்பித்து விட்டனர். எனக்கென்னவோ எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்றுத் தோன்றுகிறது.
கவலைக்குரிய விஷயங்கள்:
எல்லா கமாண்டோக்களும் வருவதற்கு விமானம் இல்லாமல் அவர்கள் வரத் தாமதம். இதற்கு பிறகு அரசு நாட்டின் முக்கிய நகரங்களில் [...]
அண்மைய மறுமொழிகள்