Posted by: மோகன் on: செப்டம்பர் 26, 2008
எனக்கு தெரிந்த நபர் ஒருவர் இவ்வருடம் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர போகிறார். அந்த சுயநிதி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் எல்லா மாணவர்களும் கண்டிப்பாக மடிக்கணினி(laptop) வாங்கியே ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அய்யா, மாணவர்கள் வீட்டில் சாதாரண கணினி(desktop computer) வாங்கி உபயோகிக்கலாம் மற்றும் கல்லூரி ஆய்வகத்தில் உள்ள கணினியையும் உபயோகப் படுத்தலாம். அப்புறம் எதற்கு மாணவர்களுக்கு மடிக்கணினி? மாணவர்கள் என்ன பிரயாணத்தின் போதும் படிக்க வேண்டும் என்ற எண்ணமா இவர்களுக்கு? [...]
Posted by: மோகன் on: செப்டம்பர் 23, 2008
காமெடி நடிகர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் குமுதம் ரிப்போர்டர்க்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு பகுதி:
`கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?’
`கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்’ என்று [...]
Posted by: மோகன் on: செப்டம்பர் 18, 2008
சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்திக்காக அலுவலகத்தில் விடுமுறை விட்டிருந்தார்கள். விடுமுறை நாளென்பதால் மதிய உணவிற்காக வெளியே செல்ல நேரிட்டது. அப்படி செல்லும்போது ஒரு விடயத்தை கவனித்தேன். நமக்கு தான் விடுமுறையேத் தவிர பெரும்பாலனவ ர்களுக்கு அந்நாள் வேலை நாளே. பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. அவர்களுக்கு இம்மாதிரி விடுமுறை நாட்களில் தானே வியாபாரம் நிறைய செய்ய முடியும்.
இதே மாதிரி மே 1 (உழைப்பாளர் தினம்) அன்று கூட இம்மாதிரி ஆட்களுக்கு விடுமுறை கிடையாது. நிறைய தடவை [...]
Posted by: மோகன் on: செப்டம்பர் 17, 2008
சில நாட்களுக்கு முன்பாக சிஎன்பிசி தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த பொது ஒரு சுவராஸ்யமான நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. அந்நிகழ்ச்சியில் ஆர்மன் என்னும் பெண்மணி தொலைபேசியில் நேயர்களுக்கு நிதி ஆலோசனை வழங்கி கொண்டிருந்தார். நேயர்கள் தங்களது நிதி நிலைமை (வருமானம், கடன், முதலீடு, சேமிப்பு) இவற்றை சொல்லி அவரிடம் ஆலோசனை பெற்றனர். உதாரணத்திற்கு ஒருவர் எதாவது பொருளை (எல்.சி.டி டிவி) விருப்பப்படுகிறார் என்றால் அவர் தனது சம்பளம், கடன் இவற்றை எல்லாம் சொல்லி தான் அந்த பொருள் வாங்கலாமா என்று [...]
Posted by: மோகன் on: செப்டம்பர் 15, 2008
மக்கள் கன்னாபின்னா செய்திகள் ரொம்ப நன்றாக இருந்தது என்றும் அதன் தொடர்ச்சி எங்கே என்றும் கேட்டு மடல் மேல் மடலாக அனுப்புவதால் கன்னாபின்னா செய்திகள் 2 உங்களுக்காக (அந்த மடல் எங்கே என்று கேட்கக் கூடாது)
ஜனாதிபதி, கவர்னர் சம்பளம் மும்மடங்கு உயர்வு: மத்திய அமைச்சரவை முடிவு
பண வீக்கம் உயர்வினாலா?
கங்குலியை நீக்கியது பின்னடைவு: சொல்கிறார் பாண்டிங்
யாருக்கு ஆஸ்திரேலியாவிற்கா?
நியாய விலைக்கடைகளில் ரூ.50க்கு 10 மளிகை பொருட்கள்:முதல்வர்
நியாயமான எடையில் இருக்குமா பொருட்கள்?
போலீஸ் குவார்ட்டர்ஸில் பெண்ணுடன் கும்மாளம்-ஏட்டு மகன் கைது
குவார்ட்டர் அடிச்சிட்டு தானே?
கச்சதீவு [...]
Posted by: மோகன் on: செப்டம்பர் 12, 2008
ஏகப்பட்ட பதிவுகள் Large Hadron Collider பற்றி போடப்பட்டுவிட்டதால், இப்பரிசோதனையைப்பற்றி நிலவரம் அறிந்துக் கொள்ள ஒரு தளம் எல்லோருக்கும் உதவியாக இருக்குமென்றே இப்பதிவு. இத்தளத்திற்கு சென்றுப் பார்த்தால் தற்போதைய நிலவரத்தை தெரிந்துக் கொள்ளலாம். இவர்கள் RSS வசதியும் தருகிறார்கள்.
Posted by: மோகன் on: செப்டம்பர் 11, 2008
சில நாட்களுக்கு முன் ஜூனியர் விகடனும் குமுதம் ரிப்போர்ட்டரும் ஜெயலலிதாவை பற்றி செய்திகள் வெளியிட்டு இருந்தன.
அதற்கு ஜெயலலிதா தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகைகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் [...]
Posted by: மோகன் on: செப்டம்பர் 9, 2008
நம்ம ஊரிலிருந்து வராங்க, ஆஸ்திரேலியாலிருந்து வராங்க, சிங்கப்பூரிலிருந்து வராங்க, கொரியாலிருந்து வராங்க(அங்க இருக்கரவங்கலுக்கு தமிழ் படிக்கத்தெரியுமானு கேட்கப்படாது), சவுதி அரேபியாலிருந்து வராங்க, தாய்லாந்திலிருந்து வராங்க, மலேசியாலிருந்து வராங்க, ஆஃப்ரிக்காவிலிருந்து வராங்க, இங்கிலாந்துலருந்து வராங்க, ஃபின்லாண்டிலிருந்து வராங்க, கனடாலிருந்து வராங்க, அமெரிக்காலிருந்து வராங்க. (இதெல்லாம் IP address வச்சிதான்)
ஆனா இது வரை பின்னூட்டம் போட்டது நம்ம ஊருலருந்து, சிங்கப்பூரிலருந்து, நைஜீரியாலருந்து, அமெரிக்காலருந்து மட்டும்தான். ஏன் இப்படி? (ஹிஹி, வோர்ட்பிரஸில புதுசா ஸ்டிக்கி போஸ்ட்னு அறிமுகப்படுத்தியிருக்காங்க, அதையும் பரிசோதிச்ச மாதிரி, [...]
Posted by: மோகன் on: செப்டம்பர் 5, 2008
இன்று காலை ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியை காண நேரிட்டது. அதில் நாட்டிற்கு தேவையான மிக முக்கிய செய்திகளை ஒளிபரப்பினர். என்னத் தெரியுமா? சல்மான்கானும், ராக்கியும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அவர்கள் அங்கு நடனம் ஆடினர்.
அது மட்டுமா, நாட்டுக்கு தேவையான இன்னொரு முக்கிய அலசல். பாலிவுட் படங்களில் விநாயகர் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளார், என்று பிரித்து மேய்ந்தனர். சத்யா(ஹிந்தி) படத்தில் விநாயகர் கிளைமேக்ஸில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு எந்தந்த நடிகர்கள் படங்களில் விநாயகர் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளார் என்று ஒரு அரிய தகவல் [...]
Posted by: மோகன் on: செப்டம்பர் 4, 2008
விஜய் தொலைக்காட்சி அதனுடைய ஜோ(கே)டி நம்பர் 1க்கு நிறைய பார்வையாளர்களை ஆயத்தப்படுத்த ஆரம்பித்து விட்டது. முன்னர் சிம்பு-ப்ரித்விராஜ் சண்டையை (அது உண்மையிலேயே சண்டைதானா?) வைத்து கொஞ்சம் பரபரப்பு உண்டாக்கியது. அச்சண்டையை பார்த்த தொலைக்காட்சி நேயர்களுக்கும் (விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தான்) இது ஒரு விளம்பரமே என்று தெரியும்.(நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை பார்ப்பதில்லை)
அடுத்த தேவையே இல்லாத பரபரப்பு விஷயம், விஜய் தொலைக்காட்சி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கு உண்டாக்கி கொண்டுள்ளது. மகேந்திரனை வைத்து இப்போது பரபரப்பு [...]
அண்மைய மறுமொழிகள்