Posted by: மோகன் on: ஆகஸ்ட் 25, 2008
ஒலிம்பிக்ஸ் 2008, நேற்றோடு இனிதே முடிந்தது. அதிக தங்க பதக்கங்களைப் (51) பெற்று முன்னிலையில் இருக்கிறது சீனா. ஆனால் அதற்கு அந்நாட்டு மக்களும் குழந்தைகளும் படும் கஷ்டங்களைப் பாருங்கள். சின்ன வயதில் அவர்கள் விருப்பம் என்னவென்று கூடக் கேட்காமல் அவர்களை இப்படி கட்டாயப்படுத்தி பயிற்சிக் கொடுத்து அவர்களை பதக்கங்களுக்கு தயார்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்? ஒருவேளை இவ்வீரர்கள் பதக்கம் பெறவில்லையென்றால் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?
இப்படங்கள் இத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.









சீன அரசு பதக்கங்களைப் பெறுவதற்கு இப்படி கஷ்டப்படுகின்றது என்றால், நமது இந்திய அரசு பதக்கங்கள் ஏதும் நாம் பெற்றுவிடக்கூடாது என்று முடிவில் இருக்கிறதோ? சீன அரசு மாதிரி யாரையும் கட்டாயப்படுத்தி விளையாட்டில் ஈடுப்படுத்த சொல்லவில்லை. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முறையான பயிற்சியும் பண உதவியும் தந்து ஊக்கமளிக்கலாமே?
முடிந்தது ஒலிம்பிக்ஸ், ஆனால் சீனக்குழந்தைகளின் கஷ்டங்கள் தொடருகிறது/தொடரும்?
Indian govt should play seriously to play
ஆகஸ்ட் 25, 2008 இல் 11:33 பிற்பகல்
சிந்திக்க வேண்டிய விஷயம்.
அருமை.
ராமநாதன்