Posted by: மோகன் on: ஜூலை 2, 2008
பெரும்பாலனவர்கள் விஜய் தொலைக்காட்சியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசித்து இருப்பீர்கள். அதில் வரும் நாயகர்கள் அநியாயத்திற்கு திரைப்படத்தையும், கதாநாயகர்களையும், இயக்குநர்களையும் (ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும்) ஓட்டி தள்ளுவார்கள். சந்தானம், ஜீவா போன்றவர்கள் லொள்ளு சபாவில் நடித்ததின் பயனாக இப்பொழுது வெள்ளித்திரையிலும் நுழைந்து விட்டனர்.
வெள்ளித்திரையில் இவர்கள் நிலைமை என்ன? தனுஷிடம் குத்து வாங்குவதும் விஜயிடம் நன்றாக மொத்து வாங்குவதும் தான் இவர்கள் இப்பொழுது செய்கின்றனர். குருவி படத்தில் ஜீவா விஜயிடம் நன்றாக மொத்து வாங்குவதை பார்த்தவுடன் எனக்கு ஜீவா “பேக்கரி என்கிற போக்கிரி” படத்தில் செய்த ரகளைகள்தான் நியாபகம் வந்தது. எப்படி இருந்த சந்தானம், ஜீவா. நீங்கள் இப்படி ஆகிவிட்டீரே என்றும் தோன்றுகிறது.
அண்மைய மறுமொழிகள்