Posted by: மோகன் on: ஜூன் 19, 2008
எப்பொழுதாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெங்களூரு பிவிஆர், ஃபன் திரையரங்ககிளிற்க்கு போவதுண்டு. அங்கு டிக்கெட் விலை உண்மையாகவே யானை விலை, குதிரை விலை (யானை விலை சரி, அது என்ன குதிரை விலை, இச்சொற்றொடர் எப்படி/எப்பொழுது வந்தது?). திரையரங்கினுள் பட இடைவேளைக்கு சற்று முன்பு திரையரங்க உணவகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்டர் எடுக்க வருவார்கள்.
இது எனது சிறுவயது திரையரங்கு சம்பந்தப்பட்ட நினைவுகளை கொண்டு வருகிறது. அந்த கொட்டாய்களில் இடைவேளை சமயம் கைமுறுக்கு, தட்டுவடை இன்னபிற சாப்பிடும் சமாச்சாரங்களை திரையரங்கினுள் விற்பார்கள். அப்போது அவர்களுக்கு சீருடை ஏதும் இல்லை.
அதைத்தான் இப்போது பிவிஆர், ஃபன் மற்றும் பல மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் நன்றாக சீருடை அணிந்த யுவதிகளும் இளைஞர்களும் செய்கிறார்கள். இவர்கள் பர்கர், நாசோஸ் என்று விற்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்!
என்னே கால மாற்றம்?
அண்மைய மறுமொழிகள்