Posted by: மோகன் on: மே 12, 2008
கர்நாடகாவில் தேர்தல் நடந்துக் கொண்டிருப்பதால், என்னுடைய கடந்த கால தேர்தல் அனுபவங்களை நினைவு கூர்கிறேன்.
நான் இதுவரைக்கும் மூன்று தேர்தல்களில் ஓட்டு போட்டிருக்கிறேன். முதல் தேர்தல் கோவையில் நான் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்தப்போது நடந்தது. அப்போது தேர்லுக்காக விடுமுறை விட்டார்கள். நானும் சேலம் வந்து என் வாக்கை பதிவு செய்தேன்.
பிறகு நான் சென்னையில் வேலை செய்துக்கொண்டிருந்தப்போது இன்னொரு தேர்தல். அதற்கு நான் விடுப்பு எடுத்து வந்து என்னுடைய வாக்கை பதிவு செய்தேன்.
அதுப்போல பெங்களூருவில் வேலை செய்துக்கொண்டிருந்தப்போது அடுத்த தேர்தல். அதற்கும் நான் விடுப்பு எடுத்து வந்து என்னுடைய வாக்கை பதிவு செய்தேன்.
தேர்தலுக்காக விடுப்பு எடுப்பதை பார்த்து என்னுடைய நண்பன் ஆச்சரியமாக கேட்டான், “என்னடா, தேர்தலுக்கா விடுப்பு எடுத்துக் கொண்டு போகிறாய்” என்று. ஆனால் தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை என்பதை ஏன் இவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை?
நம் மக்களுக்கு தேர்தல் என்றால் அது இன்னொரு விடுமுறை நாள் அல்லது அவர்கள் சொந்த வேலையை செய்ய ஒரு நாள். ஓட்டு போடாதவர்கள் அரசியலையும் அரசியல்வாதிகளையும் குறை சொல்வதை பார்த்திருக்கிறேன். கடமையை செய்யாத இவர்களுக்கு குறை சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?
மே 13, 2008 இல் 2:47 பிற்பகல்
Your are obsultely Correct… People who are not putting their vote has no rights to comment government…