மோகனின் எண்ணங்கள்

இது பழசு!

Posted by: மோகன் on: ஜனவரி 22, 2009

வணக்கம் நண்பர்களே. புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன். இனி இப்பதிவில் எவ்வித புது இடுகைகளும் இருக்காது. உங்கள் ஆதரவு வழக்கம் போல புதிய பதிவிற்கு எப்போதும் தொடர வேண்டும்.

குறிச்சொற்கள்:

கன்னாபின்னாச் செய்திகள் 5

Posted by: மோகன் on: ஜனவரி 12, 2009

ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் …

ஏன் இவ்ளோ கஷ்ட படறீங்க, அரசை கேட்டா உங்களுக்காகவே தனி ரயில், பஸ் விடுவாங்களே!

தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் இந்தியாவின் நட்பு நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது சிதம்பரம்

பாகிஸ்தான்: இன்னுமா நம்பளை நம்பிக்கிட்டு இருக்காங்க?

ஐடி துறையில் முதலீடு செய்வது வீண் .. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி

அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.

நமது அண்டை நாடுகளில்  இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலும் நிலையான ஜனநாயகம் இல்லை ப.சிதம்பரம்

அப்படியா!

தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்; அதற்கு அடுத்த வழியும் தெரியும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எது புற வழியா?

யோகா தொடர்பாக அடிக்கடி சென்னைக்கு வருவேன். எனக்குப் பிடித்த ஊர்களில் மெட்ராஸும் ஒன்று. சில்பா ஷெட்டி

நம்பிடாதீங்க, இதையே ஹைதராபாத்லையும் சொல்லுவாங்க.

நான் கொடுத்தது லஞ்சம் அல்ல – ஸ்டாலின். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது புதிதாக பிறந்த ஒரு குழந்தைக்கு வாழ்த்து கேட்டபோது, தான் பிறந்த நாள் பரிசு கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

ஒன்னும் சொல்லறதுக்கில்லை

சத்யம் நிறுவனத்தில் நடந்த கோல்மால்களை வைத்து ராம் கோபால் வர்மா ஒரு படம் எடுப்பதற்காக சத்யம் நிறுவன நிதி ஆவணங்களை ஆராய்ந்துள்ளார் என்று நம்ப முடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி திமுக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி

திமுகவின் வெற்றி ஓர் மாயை: விஜயகாந்த்

பணம் பலம் வென்று விட்டது: ஜெயலலிதா

இதுவே அதிமுக ஜெயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்

அதிமுகவின் வெற்றி ஓர் மாயை: கருணாநிதி

பண பலத்தையும் மீறி மக்கள் எங்களுக்கு ஒட்டு போட்டதற்கு அதிமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைதான் காரணம் – ஜெயலலிதா

இந்த வண்ணத்தில் இருப்பவை நிஜச் செய்திகள். இவ்வண்ணத்தில் இருப்பவை கன்னாபின்னாச் செய்திகள்.

ஜெர்மனியை சேர்ந்த இளம் காதலர்கள் ஆப்ரிக்கா சென்று திருமணம் செய்துக் கொள்வதற்காக பிரயாணம் மேற்கொண்டப் பொழுது காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜெர்மனியை சேர்ந்த காதலர்கள் மிகா(Mika) மற்றும் அன்னா லேனா(Anna-Lena). இருவரது குடும்பங்களும் நட்பாக இருக்கின்றன. இந்த புத்தாண்டை இரு குடும்பங்களும் ஒன்றாக கொண்டாடி உள்ளனர். ஆப்ரிக்காவில் இதமாக கதகதப்பாக இருக்கும் என்பதால் அவர்கள் ஆப்ரிக்காவில் திருமணம் செய்ய முடிவு செய்து அடுத்த நாள் காலை அவர்கள் பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருந்தப் போது, இக்காதலர்கள் அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு கிளம்பி உள்ளனர். கூடவே அன்னா லேனாவின் தங்கையை கல்யாணத்திற்கு சாட்சிக்காக அழைத்து கொண்டனர். வீட்டிலிருந்து 1 கி.மீ தூரம் நடந்து சென்று அங்கிருந்த ரயில் நிலையத்திலிருந்து ஹெனோவர் ரயில் நிலையத்திற்கு ரயில் பிடித்து அங்கிருந்து விமான நிலையம் செல்லும் ரயிலுக்கு காத்திருந்தனர்.

ரயில் நிலையத்திலிருந்த காவலர்கள் இந்த மூன்று பேரை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர். அவர்களை விசாரித்ததில் இந்த மாதிரி நாங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு ஓடி வந்து ஆப்ரிக்கா சென்று திருமணம் செய்துக் கொள்ள போவதாக அவர்களிடமும் சொல்லி இருக்கிறார்கள். அதில் சமாதானம் அடையாத காவலர்கள் அவர்கள் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் இக்காதலர்களை ஒப்படைத்து விட்டனர்.

இது என்ன ஒரு பெரிய விஷயம் என்று கேட்கிறீர்களா? காதலனுக்கு வயது ஆறு, காதலிக்கு வயது ஐந்து. திருமணத்திற்கு சாட்சியாக வந்தவர் வயது ஏழு. காவலர்கள் இக்குழந்தைகளிடம் பணம் மற்றும் பயணசீட்டு இல்லாமல் அங்கே(ஆப்பிரிக்கா) போக முடியாது என்று சமாதானப் படுத்தி அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் பெற்றோர்களை அங்கே வர சொல்லி அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

mika

கல்யாணம் இப்போது நின்று விட்டாலும், இக்குழந்தைகள்  எப்போது வேண்டுமானாலும் மறுபடி இத்திட்டத்தை செய்யக் கூடும் என்று காவலர்கள் கூறுகின்றனர்.

எங்கள் வீட்டு காம்பௌண்டில் மொத்தம் நான்கு வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளிலும் சேர்த்து 5 பைக்குகள் உள்ளன. இரவு வீட்டு காம்பௌண்டில் தான் நிறுத்துவோம். யார் வேண்டாலும் உள்ளே வரலாம். கேட் பூட்டினாலும் பிரயோஜனம் இல்லை. காம்பௌண்ட் சுவர் தாண்டி வந்து விடலாம். இப்பொழுது எதற்கு என் வீடு பற்றி கதை சொல்லுகிறேன் என்று கேட்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்.

சில மாதங்களாக காம்பௌண்டில் உள்ள அனைத்து பைக்குகளில் இருந்தும் பெட்ரோல் இரவு நேரங்களில் திருடப்பட்டு வருகின்றது. பெட்ரோல் டேங்கிலிருந்து வரும் டியுபை கழற்றி பெட்ரோலை திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள். இந்த பெட்ரோல் திருடர்களை எப்படி பிடிப்பது என்றும் தெரிய வில்லை. எல்லாரும் தூங்கிய பின்பு தான் வந்து தங்கள் கைவரிசைகளை காட்டுகின்றனர். இப்பொழுது எல்லாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது திருடுபவனுக்கும் சேர்த்தே பெட்ரோல் போட ஆரம்பித்து விட்டேன் (எவ்வளவு நல்லவன்!).

நேற்று எங்கள் காம்பௌண்டில் உள்ள ஒருத்தர் இரவு அவர் பைக்கிலிருந்த பெட்ரோல் முழுவதையும் பாட்டில்களில் பிடித்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை பைக் எடுக்கும் போது மறுபடி நிரப்பி கொள்ள வேண்டியது. இப்படித்தான் அவர் பெட்ரோல் திருட்டை தற்சமயம் சமாளித்துக் கொண்டிருக்கிறார். இது எப்படி இருக்கு?

இம்மாதிரியான பெட்ரோல் திருட்டை தடுக்க பெட்ரோல் லாக் எதோ இருக்கிறதாமே, யாரேனும் உபயோகப் படுத்தி இருக்கிறீர்களா? அது உண்மையிலேயே பெட்ரோல் திருட்டை தடுக்கிறதா, உபயோகித்தவர்கள் சொல்லுங்களேன்.

குறிச்சொற்கள்: ,

பட்டாம்பூச்சி விருது

Posted by: மோகன் on: ஜனவரி 2, 2009

சில நாட்களுக்கு முன் நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமா என்னுடையப்பதிவிற்கு “Butterfly Award” கொடுத்துள்ளார். இந்த அவார்ட் “Coolest Blog I ever Know (இதை எப்படி தமிழில் சொல்லுவது?)” க்கு தரப்படுவதாம்.

butterfly_award4

இந்த அவார்ட் கொடுத்த நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமாவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இந்த அவார்ட் (விருது -என்று சொல்லலாமா?) பெற எனது பதிவிற்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள்  எழாமல் இல்லை.(இது தான் சாக்குன்னு விருதை திருப்பி கேட்டுடாதீங்க  அணிமா, ஹிஹி). கொடுத்ததை திருப்பி கொடுத்தால் நன்றாக இருக்காது மற்றும் அணிமா மனம் புண்படும் என்பதாலும் இந்த விருதை நானே வைத்துக் கொள்கிறேன். இப்பொழுது இந்த விருதுக்கு நானும் சிலரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கிரி – மிகுந்த இயல்பாக பதிவுகள் எழுதுபவர்.
அது சரி – அவருடைய வேதாளம்-மாதி கதைகள்
குந்தவை – பெரும்பாலும் அவருடைய குழந்தை கண்மணியின் குறும்புகளை பற்றி எழுதுவார். அவ்வப்பொழுது சொந்த அனுபவங்களையும் சொல்வார். அதில் பள்ளிக்கு கட் அடித்த அனுபவத்தை படித்து பாருங்கள். ஹாஹா.

சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.

மோகனின் எண்ணங்கள் <—-

அணிமா <—-

ராகவன் <—-

ரம்யா <—-

பூர்ணிமா <—-

விஜய் <—–

திவ்ய பிரியா <——

G3(பிரவாகம் )—>

கார்த்தி/mgnithi—>

Gils/Shanki—->

பிரியா –>

Kartz—->

Tusharmargal—>

Akansha—->

Infinity—->

Simple Elegant Girl —- >

Chronic Chick Talk —–>

Empty Streets—–>

The Blog Reviewer
—>

biotecK—->

KisAhberuang—->

blogscope >>>>>>

பின்குறிப்பு:
இவ்விருதை ஏன் எனக்கு கொடுக்க வில்லை என்றும் ஏன் எனக்கு கொடுத்தாய் என்றும் யாரும் கோவித்துக் கொள்ள வேண்டாம்.

குறிச்சொற்கள்:

என்னை காப்பாற்றிய என் நண்பன்

Posted by: மோகன் on: டிசம்பர் 31, 2008

என் கல்லூரிப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறேன். மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டா என்று நினைவு இல்லை. அச்சமயத்தில் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துக் கொண்டிருந்தன. அதில் பளுத் தூக்கும் போட்டியும் நடக்க இருந்தது. அதில் என் நண்பன் ஒருவன் பங்கேற்க பெயர் கொடுத்திருந்தான் (அவன் ஜிம் வழக்கமாக சென்று உடம்பை நன்றாக வைத்திருப்பான்).

நான் அச்சமயம் எடை மிகவும் குறைவு. ஆகையால் என் எடை பிரிவில் போட்டியிட யாரும் இருக்க மாட்டார்கள் எனவே நான் எவ்வளவு எடை தூக்கினாலும் அப்பிரிவில் வெற்றி பெற்று விடுவேன் என்று ஒரு நண்பன் (நண்பனா அவன்) உசுப்பேத்தி விடவே நானும் அப்போட்டியில் கலந்துக் கொள்ள தயாரானேன்.

முதலில் எனது நண்பன் பளுத் தூக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள ஆயத்தமானான். என்ன ஆயிற்றோ தெரிய வில்லை. அவன் சரியாக பளுத் தூக்காமல் தவறி ஏடாகூடமாக கீழே போட்டு விட்டான். அதனால் அவனது தோள்பட்டை பிசகி விட்டது.  உடனே அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் அப்பொழுது.

எனவே எங்கள் நண்பர்கள் பட்டாளம் அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆகையால் நான் அன்று பளு தூக்க வில்லை. அனுபவம் உள்ள அவனுக்கே அன்று அக்கதி என்றால் கற்றுக்குட்டியான என் கதி என்ன ஆகி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். எனவே தான் அவனை  என்னை காப்பாற்றிய நண்பன் என்று சொன்னேன். சரிதானே? :)

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

குறிச்சொற்கள்: ,

அடுத்து என்ன இலவசமாகத் தரலாம்?

Posted by: மோகன் on: டிசம்பர் 18, 2008

செய்தி:
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக, சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

இது போன்று இன்னும் என்ன என்ன நாட்களுக்கு என்ன இலவசமாகத் தரலாம் என்று ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்ததில் தேறியவை:

  • புது ஆண்டிற்கு(2009) மற்றும் கிரிஸ்த்மஸிற்கு கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
  • குடும்பத்தில் உள்ளவர்கள் பிறந்த நாளன்று பாயசம் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
  • காதலர் தினமன்று காதலர்களுக்கு வாழ்த்து அட்டைகள் இவற்றை இலவசமாகத் தரலாம்.
  • தீபாவளி பண்டிகைக்கு 100 ருபாய் மதிப்புள்ள பட்டாசு, 100 ருபாய் மதிப்புள்ள இனிப்பு இலவசமாகத் தரலாம்.
  • தேர்தல் முடிந்து புது அரசு பதவி ஏற்கும் போது மக்கள் அனைவருக்கும் அல்வா செய்யத் தேவையான பொருட்களை (அல்லது அல்வாவை) இலவசமாகத் தரலாம்.
  • அக்ஷய த்ரிதை நாளன்று 0.0000001 கிராம் தங்கக் காசு இலவசமாகத் தரலாம்.
  • விநாயகர் சதுர்த்தி (அல்லது விடுமுறை நாள்) நாளன்று கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
  • புனித வெள்ளியன்று கேக் செய்யத் தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
  • ஆயுத பூஜை நாளன்று பொறி மற்றும் இன்ன பிற பொருட்களை இலவசமாகத் தரலாம்.
  • ரம்ஜான் அன்று தேவையான பொருட்களை இலவசமாகத் தரலாம்.
  • குடியரசு நாள், சுதந்திர நாள் அன்று தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண இலவசமாக மின்சாரம் தரலாம்.

மக்களே இது போல இன்னும் என்ன என்ன இலவசமாகத் தரலாம் என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்

Posted by: மோகன் on: டிசம்பர் 15, 2008

பெரம்பூர் ரயில் நிலையம். சேலம் போவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார் ஆனந்த்.  அவசரமாக அலுவல் வேலையாய்  செல்ல வேண்டி இருந்ததால் முன்பதிவு செய்யவில்லை. அப்போது சேலம் செல்லும் ஒரு ரயில் மிகுந்தக் கூட்டத்துடன் வந்தது. முன்பதிவு செய்யப்படாத ஒருப்பெட்டியில் முண்டியடித்து ஏறி உட்கார இடம் தேடினார். எங்கேயும் உட்கார இடம் இல்லை.

மெல்ல நகர்ந்து நான்கு பேர் உட்கார்ந்து இருந்த இருக்கை அருகேச் சென்றார். அங்கு உட்கார்ந்து இருந்த வாலிபனிடம் “கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்” என்றார். அதற்கு அவன் “முன்னாடியே நாலு பேரு உக்காந்து இருக்கோம், இதிலே எங்கத் தள்ளி உக்கார?” என்று முறைத்தான். அதற்கு ஆனந்த் “சேலம் வரைக்கும் போகணும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோப்பா” என்று கேட்டார். அவனும் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்து இடம் கொடுத்தான். ஆனந்தும் உட்கார்ந்துக் கொண்டார்.

சில மணி நேரம் கழித்து ரயில் காட்பாடியில் நின்றது. ஆனந்த் அருகே உட்கார்ந்திருந்த இளைஞன் காட்பாடியில் இறங்கி விட்டான். அவன் இறங்கியவுடன் ஆனந்த் வசதியாக இருக்கையில் உட்கார்ந்துக் கொண்டார். காட்பாடியிலும் கூட்டம் ஏறியது. அங்கு ஏறிய ஒருவர் ஆனந்த் அமர்ந்து இருந்த இருக்கை அருகே வந்தார். அவரிடம் “கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார், நானும் உக்காந்துக்கறேன்” என்று கேட்டார்.

அதற்கு ஆனந்த் “இது நாலு பேரு உட்கார சீட், இதுல முன்னாடியே நாலு பேரு உக்காந்து இருக்கோம். இதுல எப்படி உங்களுக்கு இடம் கொடுக்கறது?” என்று பதிலளித்தார். காட்பாடியில் ஏறியவரோ “சார், நான் ஈரோடு வரைக்கும் போகணும். கொஞ்சம் இடம் கொடுங்களேன்” என்றுக் கெஞ்சினார். ஆனந்த் “ஈரோடு வரைக்கும் போகனும்னா சென்னை சென்ட்ரல் போய் அங்க இருந்து ஏதோ ஒரு ட்ரைன்ல உட்காந்துட்டு வர வேண்டியது தானே? ஏன் எங்க உயிரை எடுக்கறீங்க?” என்று கடுகடுத்துவிட்டு தூங்குவது போல பாவ்லா செய்ய ஆரம்பித்தார். ஆனந்திடம் இருக்கை கேட்ட நபர் வேறு வழியின்றி பரிதாபமாகத் தன் பயணத்தை நின்றுக் கொண்டே தொடர்ந்தார்.

குறிப்பு 1:கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே.
குறிப்பு 2: என் முதல் சிறுகதை முயற்சி. எப்படி இருக்கிறதென்று பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

குறிச்சொற்கள்:

இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்(தத்)திற்கு   பிறந்த நாள் வாழ்த்துகள்.

எல்லோரும் இதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருப்பார்கள். இருந்தாலும் நான் ரஜினி ரசிகன் என்பதால் இப்பதிவு.

வலையில் கிடைத்த சில சுவையான சம்பவங்களை அப்படியே பகிர்ந்துக் கொள்கிறேன்:

சினிமா எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் இருந்து எடுக்கப்பட்ட சுவையான சம்பவம். நன்றி சினிமா எக்ஸ்ப்ரஸ்.

பெங்களுருவில் உள்ள சாம்ராஜ்பேட்டை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட்… இந்தப் பகுதிகள் சென்னையிலுள்ள தி.நகர் ரங்கநாதன் தெரு போல் எந்த நேரமும் பரபரப்பாக இருக்கின்ற இடம். பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ் ஏறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள். அவரவர் வேலையிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

ஒரு வயதான கிழவி விறகுச் சுமையைத் தலைமீது தூக்கி வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். நான்கு பக்கமும் பார்த்து யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று பார்க்கிறார்.

பஸ் ஸ்டாண்ட்டின் ஓரமாக இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த கிழவிக்கு உதவ யாரும் முன்வராததை கவனிக்கின்றார். உடனே ஓடோடிச் சென்று விறகுக்கட்டைத் தூக்கி விடுகிறார்.

‘‘இத்தனை பேர் நடமாடுகின்ற இடத்தில் யாரும் இவருக்கு உதவவில்லையே” என்ற வருத்தத்தோடு அந்த கிழவியை பார்த்தவர் கண்களில் தன் தாய் ஞாபகம் வர, கொஞ்சம் பணத்தை எடுத்து அந்த கிழவியிடம் கொடுத்துவிட்டு நகர்கிறார்.

அந்த கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் கொடுத்த நபரை அன்னாந்து பார்ப்பதற்குள் அவர் படு ஸ்பீடாக, ஸ்டைலாக நடந்து மாயமாய் மறைந்துவிட்டார்.

சுமையோடு நின்ற கிழவி, எங்கேயோ பார்த்த நபராக இவர் தெரிகிறாரே என்று நினைக்கிறார். அந்த முகத்தை மறுபடி அசை போட்டபடி நடக்கிறார். அந்தக் கிழவிக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது தெரியாது.

இது ஏதோ ரஜினி கண்டக்டராக இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் என்று நீங்கள் நினைத்திருந்தால் ஸாரி… புகழ் பெற்ற நடிகரான பிறகு மாறு வேடத்தில் ரஜினி பெங்களூரை சுற்றியபோது நடந்த நிகழ்ச்சி இது!

ரஜினியின் நண்பர்களான கன்னட நடிகர் துவாரகேஷ், பாலமுத்தய்யா, ஜெகதீஷ்ரெட்டி ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சிரித்திருக்கிறார் ரஜினி.

‘‘ஏன் இப்படி மாறுவேடத்தில் போகிறீர்கள்?” என அவர்கள் ரஜனியிடம் கேட்டபோது, ‘‘யாரும் என்னை அடையாளம் தெரிஞ்சிக்காம இருந்தாதான் எந்த இடத்திற்கும் என்னால் போய் வர முடியும். முன்பு நான் பஸ் கண்டக்டரா இருந்தபோது பழகிய, பார்த்த இடங்களுக்குப் போனால் மனதுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கிறது. மக்களோடு நெருங்கிப் பழக வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவருக்கும் ஏற்றமான வாழ்க்கையை ஆண்டவன் கொடுக்கணும் என்று கடவுளிடம் நான் வேண்டாத நாள் கிடையாது” என்று பதிலளித்திருக்கிறார் ரஜினி.

இன்னொரு சுவராஸ்யமான சம்பவம்/பேட்டி: இது தமிழ்வாணன் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கணவன் ரஜினியை மனைவி லதா ஒரு பேட்டி கண்டார், ‘சாவி’ பத்திரிக்கைக்காக. அந்தப் பேட்டியில் அவர் கேட்ட சில சுவையான கேள்விகளும் அவற்றிற்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் அவர்களது அந்நியோன்யமான குடும்ப வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அவை வருமாறு:

‘நீங்கள் எனக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகையை மணந்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்?‘

‘சினிமா நடிகையும் ஒரு பெண்தானே?‘

‘படப்பிடிப்புக்குப் போய்விட்டு வீடு திரும்பும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?‘

‘எனக்கு என்ன தோன்றும் என்று உனக்குத்தான் தெரியுமே! எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?‘ (’வேண்டாம்…’ என்கிறார் லதா வெட்கத்தோடு)

‘ஏன் கல்யாணம் செய்துகொண்டோம், பிரம்மசாரியாக இருந்திருக்க கூடாதா என்று எண்ணியதுண்டா?‘

‘உன்னோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும் போது கல்யாணத்தை எவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று வருத்தப்படத்தான் தோன்றுகிறது.‘

‘வசதியான வீடு, மனத்திற்கேற்ற மனைவி, சினிமாப் புகழ் இந்த மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?‘

‘என் தனித்தன்மையை!‘

‘என்னிடம் இதுவரை சொல்லாத இரகசியமோ மறைத்து வைத்த விஷயமோ உண்டா? இருந்தால் ஏன் சொல்லவில்லை?‘

‘என்னிடம் எந்த இரகசியமும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட நீயே இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே நியாயமா?!‘

‘ஒரு மனைவியின் முதல் குழந்தை கணவன் என்கிறார்களே, அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?‘

‘என்னைப் பொறுத்தவரை ஒப்புக்கொள்கிறேன்!‘

‘குடும்ப வாழ்க்கையில் என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எது அடையாளம்?‘

‘நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதுதான் அடையாளம்!‘

‘ஓரு பிரபல நடிகரின் மனைவியாகிய எனக்கு உண்மையான மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது?‘.

‘என்னுடைய மகிழ்ச்சியில்!‘

‘என்னைப் போலவே யாராவது டெலிபோனில் நான்தான் லதா பேசுறேன்னு சொன்னால் நீங்கள் நம்பிவிடுவீர்களா?‘

‘என் ஜில்லுவின் குரல் எனக்குத் தெரியாதா என்ன?‘

‘மனம் விட்டுச் சொல்லுங்கள், என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எது?‘

‘முன்பின் தெரியாமல் எல்லோரிடமும் கருணை காட்டுவது!‘

குறிச்சொற்கள்:

கன்னாபின்னாச் செய்திகள் 4

Posted by: மோகன் on: டிசம்பர் 10, 2008

எங்க கன்னாபின்னாச் செய்திகள் அடுத்த பாகம் என்று விடாமல் மடல் மேல் மடல் போட்டு விசாரித்த அன்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இதோ கன்னாபின்னாச் செய்திகள் பாகம் 4.

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. காரணம் ஒகேனக்கல் விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை கர்நாடகா கிளப்பிக் கொண்டிருப்பதுதான். சில நாட்களுக்கு முன்பு கூட கர்நாடகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் ஒகேனக்கல் பகுதியில் ஆர்பாட்டம் நடத்தினர். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தையும் அரசு ரகசியமாகவே முழுமையாக முடிக்கவும் திட்டம் இட்டுள்ளது. அதே போன்று, நீரையும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதிகளுக்கு ரகசியமாக வழங்கப்படும் என்று நம்ப முடியாத வட்டங்கள் தெரிவிக்கின்றன.

இங்கே(மதுரை) மேயரோ, துணை மேயரோ உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் மதுரை வந்தால் எழுச்சியான வரவேற்புக் கொடுப்பதில்லை. போஸ்டர்கள் ஒட்டுவதில்லை. அப்படியிருக்க, ஸ்டாலின் மதுரை வந்தால் இவர்கள் எப்படி அவர் முன்னால் போய் நிற்கமுடியும்?” என அலுத்துக்கொண்டு முடித்தனர் தி.மு.க. கவுன்சிலர்கள். திமுக தலைவரே போஸ்டர்கள், வரவேற்பு விளம்பரங்கள் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி இருக்க சில கவுன்சிலர்கள் இப்படி சொன்னால் என்ன அர்த்தம்? அப்பொழுது இந்த மாதிரியான மரியாதைகள் செய்தால் தான் அவரி(ர்களி)டம்  மக்கள் பிரச்சினையை பேச முடியுமா?  என்னக் கொடுமை சார் இது?

மதுரை தி.மு.க. கவுன்சிலர்கள் இரு குழுக்களாக இருப்பது அதிகாரிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. அதனால் அழகிரி அண்ணன் கவனத்துக்கு அதிகாரிகள் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கொண்டு செல்வதில்லை. அதிகாரிகள் நன்றாகச் செயல்படுகிறார்கள் என அண்ணன் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதை பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.

தீவிரவாதிகளின் தாக்குதலை நேரடி ஒளிபரப்பு மீடியாக்கள் செய்தது சரியா தவறா? சரி என்றால் Y என்றும் தவறு என்றால் N என்றும் 9000000000 என்கின்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்(ஒரு செய்திக்கு 50 ரூபாய் உங்கள் மொபைலில் இருந்து கழிக்கப்படும்)

“ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்” எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். நீங்க முதலமைச்சரா இருந்தப்போது  உங்கள்  மேல் ஒரு குற்றச்சாட்டு இருந்ததே, அப்போது  ஏன் நீங்களாகவே பதவி விலகி விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வில்லை? அப்படின்னு நான் கேக்கலை,மைனாரிட்டி திமுக அரசை சேர்ந்தவங்க கேக்கறாங்க.

சென்னை, நவ. 25:நக்சல் (மாவோயிஸ்ட்) இயக்கத்திற்கு மதுரையில் உள்ள 2 கல்லூரிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேம்பஸ் இன்டர்வியு?

இலங்கைத் தமிழர் பிரச்சனை : லண்டன் சென்றார் வைகோ! எப்போ இலங்கை போறீங்க?

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் தஞ்சையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதை இலங்கையில செஞ்சி இருக்கலாமே?

சிட்டி வங்கிக்கு 306 பில்லியன் டாலர் அரசு உதவி. சிட்டி வங்கியில் கடன் வாங்கி இருக்கும் எனக்கு யாராவது  உதவ முன் வருவீர்களா என்று கேட்கிறார் நம்ம கோவிந்து.

வீட்டுக் காவலில் மசூத் அசார் : பாகிஸ்தான் நடவடிக்கை! ஏன் வீட்டிலேயே உக்காந்து அடுத்த தாக்குதலை திட்டமிடறதுக்கா?

திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேர இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டி போடுகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அதிருப்தி அலை வீசாது, சுனாமி அதிருப்தி அலையே வீசும் அப்படின்னுல பேசிக்குறாங்க.

பந்து வீச அதிக நேரம் எடுத்தால் கடும் நடவடிக்கை; கிரிக்கெட் சங்கம் முடிவு. இப்படி சொல்லிட்டதால பந்தை எறியாதீங்க.

5 மாநில தேர்தல் முடிவு; மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை-பா.ஜனதா கருத்து. இதைதான் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைனு சொல்லுவாங்களா?

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லி:-3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்து இருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது . டெல்லியில் கிடைத்த வெற்றி நாடு முழுவதும் வெற்றி பெற்றதற்கு சமம். ஆமா, யாராலும் தடுக்க முடியாது. நீங்க இப்படியே பண்ணிக்கிட்டு(அதாவது ஒண்ணுமே செய்யாம) இருங்க. வேற யாரும் ஒண்ணும் பண்ண வேண்டாம். யானை தன் தலையில தானே மண் அள்ளி போட்டுக்குமாம், அது மாதிரி ஆகிட போகுது.

சேலத்தில் 31 ஏழைகளை அகற்றி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆடியாட்கள் கைப்பற்றியதாக கூறப்படும் நிலம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. லோக்கல் கேபிள் டிவி ஒண்ணு ஆரம்பிச்சமா அதை வச்சி நெறைய பிசினஸ் ஆரம்பிச்சமானு அப்படியே நிறைய டெவலப் பண்ணமானு இருந்திருந்தா பிரச்சனையே இருந்து இருக்காதே?

கருணாநிதி குடும்பம் – மாறன் சகோதரர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்தது. அப்போ சன் டிவி டாப் டென்ல வாரணம் ஆயிரம் வருமா வராதா? தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்குமா இருக்காதா?

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த முக்கியமான அவசரம் எதுவும் இல்லை என்றும் வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். ஏப்ரல் 1 அன்னிக்கி வச்சா ரெம்ப பொருத்தமா இருக்கும்னு பொது மக்கள் சொல்லுறாங்க.

பின்குறிப்பு:

இந்த வண்ணத்தில் இருப்பவை நிஜச் செய்திகள். இவ்வண்ணத்தில் இருப்பவை கன்னாபின்னாச் செய்திகள்.

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,215 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

  • ஒரு பிழை நடந்துள்ளது; செய்தி ஓடை செயற்படவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் முயற்சிக்கவும்.

இணைப்புகள்

Page Rank


  • vivek: Arumai Arumai
  • Bhuvanesh: //யாருங்க அது? சமத்துவ நாயகன் தெரியாதா?? அதான் பா நம்ம சுப
  • மோகன்: // நீங்கள் சமத்துவ நாயகனை இருட்டடைப்பு செய்வதை கண்டிக்க

நாள்காட்டி

ஜூலை 2009
தி செ பு வி வெ ஞா
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters